ஆப்நகரம்

வாள்வீச்சு வீராங்கனைக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்: குவியும் பாராட்டுக்கள்!

ஒலிம்பிக் வாள் சண்டை போட்டியில் பதக்கம் இழந்த பவானி தேவியை நேரில் சந்தித்து தங்க செயின் பரிசளித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் சசிகுமார்.

Samayam Tamil 8 Sep 2021, 12:21 pm
கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழ் நாட்டை சேர்ந்த வீராங்கனையான பவானி தேவி, துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Samayam Tamil Sasikumar
Sasikumar


இதன்மூலம், ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனை என்கின்ற பெருமையை பவானி தேவி பெற்றார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பவானி தேவி, இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையான மனோன் ப்ருநட்டிடம் 15 -7 என்ற கணக்கில் தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஒலிம்பிக் வாள் சண்டை போட்டில் பதக்கம் இழந்தாலும் அவருக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சசிகுமார் பவானி தேவியை நேரில் சந்தித்து தங்க செயின் அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் புலமைப்பித்தன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!
இது தொடர்பாக இரா. சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிக்குமார். நல்லமனம் வாழ்க என பதிவிட்டுள்ளார்.


சசிகுமார் இரா.சரவணன் இயக்கத்தில் 'உடன்பிறப்பே' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்