ஆப்நகரம்

நடிப்பதற்கு முன் நடிகர் சத்யராஜ் செய்து வந்த தொழில்?!

சினிமாவில் நடிப்பதற்கு முன் நடிகர் சத்யராஜ் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தாராம்.

Samayam Tamil 12 Jun 2018, 4:45 pm
சினிமாவில் நடிப்பதற்கு முன் நடிகர் சத்யராஜ் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தாராம்.
Samayam Tamil actor-sathyaraj-funny-speech-kadai-kutty-singam


சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சத்யராஜ், ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் பல படங்களில் வில்லனாக நடித்தார். அதையடுத்து குணச்சித்திர வேடத்தில் நடித்து பின்னர் கதாநாயகனாக மாறினார். சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் நடிக்க வருவதற்கு என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என நடிகர் சிவகுமார் நேற்று நடந்த ஒரு விழாவில் கூறினார்.

நடிகர் சத்யராஜ், சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சென்னையில் தரைதட்டிய கப்பலை உடைத்து பழைய இரும்புக்கு விற்கும் காண்ட்ராக்ட் தொழிலை செய்து வந்தார். அதனுடன் ஐஸ் கிரீம் பார்லர் ஒன்றையும் நடத்தி வந்தார். அந்த இடத்தில் இருந்தவர் அவரை தற்போது உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்த்துள்ளார்’’ என்றார்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்