ஆப்நகரம்

'நாய் சேகர்' படத்துக்காக மிர்ச்சி சிவா செய்த காரியம்: நன்றி சொன்ன சதீஷ்!

'நாய் சேகர்' படத்துக்கு செல்லப்பிராணி நாய்க்கு குரல் கொடுத்துள்ள மிர்ச்சி சிவாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் சதீஷ்.

Samayam Tamil 3 Jan 2022, 1:12 pm
தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் சதீஷ். சில மாதங்களுக்கு முன்பாக இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'நாய் சேகர்' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. சென்னையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.
Samayam Tamil Naai Sekar
Naai Sekar


கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பிட்டுப் படப்பிடிப்பை நடத்தி வந்தனர் படக்குழு.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டனர். 'நாய் சேகர்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருப்பதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்திருப்பதாகவும் அண்மையில் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு: அபராதம் விதித்த நீதிமன்றம்!
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சதீஷின் 'நாய் சேகர்' படத்தின் டீசர் வெளியானது. இதனை நடிகர் சிவகார்த்திகேயனும், கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். டீசரில் இடம்பெற்ற டைமிங் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.

இந்தப்படத்தில் செல்லப்பிராணி நாய்க்கு மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சதீஷ், சிவாவிற்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்