ஆப்நகரம்

அமைச்சர்கள் புறவாசல் வழியாக சென்றால், வேலூர் ஜெயிலுக்கு தான் போகனும்! : நடிகர் செந்தில்

தமிழக அமைச்சர்கள் புறவாசல் வழியாக, இந்த அரசியலை விட்டு செல்ல நினைத்தால், நேராக வேலூர் ஜெயிலுக்கு தான் போக வேண்டியிருக்கும் என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

TNN 18 Jun 2017, 1:11 pm
சென்னை : தமிழக அமைச்சர்கள் புறவாசல் வழியாக, இந்த அரசியலை விட்டு செல்ல நினைத்தால், நேராக வேலூர் ஜெயிலுக்கு தான் போக வேண்டியிருக்கும் என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor senthil met press people after he met ttv dinakar
அமைச்சர்கள் புறவாசல் வழியாக சென்றால், வேலூர் ஜெயிலுக்கு தான் போகனும்! : நடிகர் செந்தில்


அதிமுக அம்மா அணி துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
செந்தில் பேசும் போது, “அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்படுவது நல்லது. தமிழக அமைச்சர்கள் புற வாசல் வழியாக வெளியேற நினைத்தால், நேராக வேலூர் ஜெயிலுக்குத்தான் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் இரண்டு, மூன்று பதவிகள் இருக்கின்றன, அதை மற்ற எம்.எல்.ஏக்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்.

இப்போதுள்ள சூழலில் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என தோன்றுகிறது. வரட்டும் அவர் இந்தியர்” என செந்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்