ஆப்நகரம்

சமந்தாவுக்காக ட்வீட் போட்டேனா?: சர்ச்சைகளை கிளப்பிய ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்!

சர்ச்சைகளை கிளப்பிய தனது ட்விட்டர் பதிவு குறித்து நடிகர் சித்தார்த் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 9 Oct 2021, 10:18 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் விவாகரத்து செய்ய போவதாக கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்த யுகங்களை கடந்த வாரம் சமந்தாவும், நாக சைதன்யாவும் உறுதிப்படுத்தினார்கள்.
Samayam Tamil Siddharth
Siddharth


சமந்தாவும், சித்தார்த்தும் ஆரம்பத்தில் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்குமிடையேயான காதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சமந்தா சித்தார்த்துடனான தனது காதலை முறித்துக்கொண்டு நாகசைதன்யாவை மணந்தார். இந்நிலையில் சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து செய்தி வெளியானதை தொடர்ந்து நடிகர் சித்தார்த் ட்வீட்ஒன்று பதிவிட்டார்.

"பள்ளியில் நான் ஆசிரியரிடம் கற்றுக்கொண்ட முதல் பாடம் ஏமாற்றுகிறவர்கள் வெற்றிபெறுவதில்லை" என பதிவிட்டிருந்தார். சமந்தா விவாகரத்தை குறிப்பிட்டே சித்தார்த் இதனை பதிவிட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டினர்கள். இந்நிலையில் ‘மகாசமுத்திரம்’ படம் குறித்து தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில், தனதுட்வீட் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார் சித்தார்த்.

நயன்தாராவுடன் டூயட் பாடும் தலைவர்.. வெளியானது ‘அண்ணாத்த’ செகண்ட் சிங்கிள்!யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட்டை போடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை வைத்து அதனைப் போட்டேன். என்னுடைய‘மகாசமுத்திரம்’ படம் கூட அப்படியான ஒரு விஷயத்தைத்தான் கையாண்டிருக்கிறது. யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்.
என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. சமூக வலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல. என்னுடைய வீட்டிற்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால், என்னைத்தான் அப்படிச் சொன்னார் என்று யாரும் புகார் சொல்லக்கூடாது என்று மீண்டும் சர்ச்சைகளை கிளப்பும் விதமாக விளக்கமளித்துள்ளார் சித்தார்த்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்