ஆப்நகரம்

Chowkidar: என்னை, மிரட்டி பேசுனவங்க தான் இப்போ சவுக்கிதார்: கோபத்தில் கொந்தளித்த சித்தார்த்!

என்னை மிரட்டி, தவறாக பேசியவர்கள் தான் தற்போது சவுக்கிதார் என்று கூறிக்கொள்வதாக நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2019, 1:11 pm
என்னை மிரட்டி, தவறாக பேசியவர்கள் தான் தற்போது சவ்கிதார் என்று கூறிக்கொள்வதாக நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil sidd


வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. தொடர்ந்து 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி பல்வேறு வியூகங்கள் வகுத்து, புதுமையான முறைகளில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி, தன்னுடைய டுவிட்டரில் பெயருக்கு “மக்கள் பாதுகாவலன் என்ற அர்த்தம் கொண்ட “சவுக்கிதார்”என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார்.

Also Read This: நாங்களும் ”சவுக்கிதார்” தான்; டுவிட்டரை தெறிக்கவிட்ட தமிழக பாஜக தலைவர்கள்!

Also Read This: சவுக்கிதார் ஒரு திருடன்! ட்விட்டரின் மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவு

Also Read This: #Chowkidar பாஜக-வினரும், மோடி பாபாவும், 40 திருடர்களும்: காங்கிரஸ் சாடல்

Also Read This: Chowkidar: நானும் சவுக்கிதார் தான்: பாஜகவை விமர்சிக்கும் ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் போஸ்டர்!

அதாவது ”சவுக்கிதார் நரேந்திர மோடி எனக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள், நிர்வாகிகளும் என்று பலரும் தங்களது பெயருக்கு முன்பாக சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டனர். இந்த நிலையில், இது குறித்து அண்மையில், நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் சித்தார்த் பற்றி மிக மோசமான வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.

இதையடுத்து, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இப்போது மட்டுமில்ல எப்போதும் தேவை ஏற்படும் பொழுது அரசியல் கட்சிகளுக்கு எதிராக நான் பேசியுள்ளேன். ஆனால், ஒரு கூட்டத்தினர் மட்டும் என்னை மிரட்டி, தவறாக பேசி வந்துள்ளனர். தற்போது, அவர்களில் பெரும்பாலானோர் தான் தங்களை சவுக்கிதார் என்று கூறிக்கொள்கின்றனர். இவ்வளவு ஏன், பாஜக தொழில்நுட்ப பிரிவு என்னை பற்றி கூறி வரும் போலி செய்திகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.

ஏன், நான் வருமான வரி கூட தவறாமல் செலுத்தி வருகிறேன். இதுவரை ஒரு பைசா கூட நான் ஏமாற்றவில்லை. அதனால், எப்போதும் அநீதிக்கு எதிராக பேசுவேன். நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்