ஆப்நகரம்

நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Dec 2021, 4:58 pm
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகின்றனர். அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சிம்புவின் அடுத்த படத்திற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
Samayam Tamil Silambarasan
Silambarasan


'மாநாடு' படத்தை தொடர்ந்து தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிம்பு, கெளதம் மேனன் இணையும் படத்திற்கு ஆரம்பத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற தலைப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் படத்தின் டைட்டிலை மாற்றி பாரதியாரின் கவிதை வரிகளான 'வெந்து தணிந்தது காடு' என பெயர் வைத்தனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. அதில் சிம்புவின் லுக் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

'மாறன்' அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்: செம்ம குஷியில் தனுஷ் ரசிகர்கள்!
இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென சிம்பு உடல்நலக் குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது கொரானா இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்