'மாநாடு' சிம்புவின் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்தினர். பலவித தடைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
மாநாடு படத்தில் நடித்து முடித்த சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து சிறுவயது பையன் லுக்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் சிம்புவா இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையில் எல்லையைத் தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம். இறைவனின் பெருங்கருணையால் இந்தப் புதிய வருடத்தைக் காணவிருக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் ‘மாநாடு' படத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021ஆம் ஆண்டை முடிக்கிறேன். 2022ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாகப் பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகப் பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க. நீங்கள் இல்லாமல் நான் இல்லை'. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு.
மாநாடு படத்தில் நடித்து முடித்த சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து சிறுவயது பையன் லுக்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் சிம்புவா இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையில் எல்லையைத் தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம். இறைவனின் பெருங்கருணையால் இந்தப் புதிய வருடத்தைக் காணவிருக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் ‘மாநாடு' படத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021ஆம் ஆண்டை முடிக்கிறேன். 2022ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாகப் பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகப் பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க. நீங்கள் இல்லாமல் நான் இல்லை'. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு.