ஆப்நகரம்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம்: தோழிகள் தோள் மீது கை போட்டு போட்டோ எடுத்த எஸ்.டி.ஆர்!

தோழி நடிகைகளான ஐஸ்வர்யா மறறும் யாஷிகா ஆனந்த் மீது நடிகர் சிம்பு அவர்களின் தோளில் கை போட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Feb 2019, 5:43 pm
தோழி நடிகைகளான ஐஸ்வர்யா மறறும் யாஷிகா ஆனந்த் மீது நடிகர் சிம்பு அவர்களின் தோளில் கை போட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil STR


கடந்த வாரம் சிம்பு நடிப்பில் உருவான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படம் வெளியானது. இந்தப்படத்தை சுந்தர் .சி இயக்கியிருந்தார். இந்தப் படம் தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று தனது 36வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதற்காக தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, ஹரீஸ் கல்யாண் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சிம்புவின் நீண்ட கால நண்பரான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் கலந்து கொண்டார். இவர்களுடன் யாசியா ஆனந்த்தும், ஐஸ்வர்யாவும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் நடிகர் சிம்புவின் நெருங்கிய தோழிகளாம். இதில் நடிகர் சிம்பு இரு தோழிகள் தோள் மீதும் கைப்போட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்