ஆப்நகரம்

சர்கார் பிரச்சனை குறித்து விவாதிக்க தயார்- அன்புமணி ராமதாஸுக்கு சிம்பு சவால்!!

படங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவது குறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Jul 2018, 6:03 pm
படங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவது குறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சர்கார் பிரச்சனை குறித்து விவாதிக்க தயார்- அன்புமணி ராமதாஸுக்கு சிம்பு சவால்!!
சர்கார் பிரச்சனை குறித்து விவாதிக்க தயார்- அன்புமணி ராமதாஸுக்கு சிம்பு சவால்!!


நடிகர் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தின் நடித்து வருகிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து நடிக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று வெளியிட்டார். ‘மாநாடு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அரசியலை மையமாக வைத்து உருவாகும் படம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சிம்பு, “அரசியலை மையமாக உருவாகும் படம் என்பதால், நான் அரசியலுக்கு வருவேன் என்று அர்த்தமில்லை. படத்திற்கு என்ன தேவையோ அதைப் பேசித்தான் ஆக வேண்டும். பாபா படம் தொடங்கி, சர்கார் வரை சினிமாக்களின் மீது அரசியல்வாதிகள் தலையீடு செய்து வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் விரும்பினால், சினிமாக்காரர்கள் தரப்பிலிருந்து அவருடன் இந்தப் பிரச்சனைக் குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன். விவாதம் இடம், நேரத்தை அவரே முடிவு செய்யட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்