ஆப்நகரம்

எனக்கே இப்படினா; ரஜினி, கமலோட நிலைமையை யோசிச்சு பாருங்க; சிம்பு ஆவேசம்!

ரஜினி, கமலுக்கு நேரப் போகும் நிலைமை குறித்து, சிம்பு ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 18 Apr 2018, 4:23 pm
சென்னை: ரஜினி, கமலுக்கு நேரப் போகும் நிலைமை குறித்து, சிம்பு ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil Simbu
நடிகர் சிம்பு


காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து, பகிர்ந்து கொள்வதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று நிரூபிக்குமாறு கர்நாடக மக்களை சிம்பு கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்று, கர்நாடக மக்களும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால் சிம்பு செய்யும் செயலைக் கூட ரஜினி, கமல் செய்யவில்லை என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கமளித்த சிம்பு, கர்நாடக மக்கள் கெட்டவர்கள் இல்லை. மக்களை வைத்து அரசியல்வாதிகள் பிரச்சனை செய்கின்றனர். இதற்கு அரசியல் பிம்பத்தை உடைக்க வேண்டும்.

சிம்பு மாதிரி ரஜினி, கமல் இல்லை என கூறுவதே தவறு. ஏனென்றால் நான் சொன்னதற்கு தமிழனே இல்லை என்கிறார்கள். தமிழ், தமிழ் என்று சொல்கிறேன். சிலம்பரசன் என்று பெயர் வைத்துள்ளேன்.

டி.ராஜேந்தர் மகனாக பிறந்துள்ளேன். ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்துள்ளேன். எனக்கே இந்த நிலைமை என்றால், ரஜினி, கமலுக்கு சொல்லவா வேண்டும். தமிழனா, இந்தியனா என்று கேட்டால்.

நான் மனிதன் என்று சொல்வேன். ஒருவேளை மனிதனாக இல்லை என்று நிரூபித்தால், நீங்கள் சொல்வதை கேட்கிறேன். நான் எந்த கட்சியும் கிடையாது. ஏனென்றால் உடனே அரசியல் பக்கம் திருப்பிவிடுவார்கள் என்று சிம்பு கூறினார்.

Actor Simbu explains the future of Rajini and Kamal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்