ஆப்நகரம்

மணிரத்னத்திற்கு பிறகு மங்காத்தா இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு!!

நடிகர் சிம்பு மணிரத்னம் படத்திற்கு பிறகு மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jun 2018, 11:26 am
நடிகர் சிம்பு மணிரத்னம் படத்திற்கு பிறகு மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மணிரத்னத்திற்கு பிறகு மங்காத்தா இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு!!
மணிரத்னத்திற்கு பிறகு மங்காத்தா இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு!!


நடிகர் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தின் நடித்து வருகிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து நடிக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு, அடுத்ததாக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா 2, அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சிம்பு 'செக்க சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மங்காத்தா, மாஸ், சென்னை 600028 உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெங்கட்பிரபுவும் சிம்புவும் இணைந்து பில்லா 3 படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், இது எந்தப் படத்தின் தொடர்ச்சியும் இல்லை எனவும், இது முற்றிலும் புதிய கதை எனவும் இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்