ஆப்நகரம்

ஏ.ஆர்.ரஹ்மானுக்காக குரல் கொடுக்கும் சிம்பு!

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில், நடிகர் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

TNN 17 Jul 2017, 4:16 pm
சென்னை: லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில், நடிகர் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
Samayam Tamil actor simbu supports a r rahman
ஏ.ஆர்.ரஹ்மானுக்காக குரல் கொடுக்கும் சிம்பு!


லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், தமிழ்ப் பாடல்களைப் பாடியபோது வட இந்தியர்கள் நிகழ்ச்சியின் பாதியிலேயே அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர். சிலர், டிக்கெட்டுக்கான தொகையைத் திருப்பித்தர வேண்டுமெனவும் தகராறு செய்தனர். இந்த விவகாரம் பெரிதாகி, பல்வேறு பிரபலங்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் சிம்பு கூறுகையில், “இசைக்கு மொழி கிடையாது. இசை எல்லா மக்களையும் ஒருங்கிணைக்க அதுதான் காரணம். ஜீனியஸ் லெஜண்ட் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் முடிவில் எல்லோருக்கும் அமைதி கிடைக்கிறது” என்று சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Simbu supports A R Rahman.

அடுத்த செய்தி

டிரெண்டிங்