ஆப்நகரம்

சிம்புவுடன் இணையும் துருவங்கள் பதினாறு இயக்குநர்?

துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன், அடுத்ததாக சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 10:20 am
துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன், அடுத்ததாக சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil சிம்புவுடன் இணையும் துருவங்கள் பதினாறு இயக்குநர்?
சிம்புவுடன் இணையும் துருவங்கள் பதினாறு இயக்குநர்?


நடிகர் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தின் நடித்து வருகிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு, அடுத்ததாக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா 2, கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படம், அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றைக் கூறியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது, ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் அடுத்ததாக ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்கப்போவதாக தெரிவித்தார். ஆனால், அந்தப் படத்தின் பணிகள் தாமதமாவதால், சிம்புவை வைத்து படம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பதால், உற்சாகத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மேலும் சந்தோஷமடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்