ஆப்நகரம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் எஸ்கே மகள் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்.!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தியுள்ளார்.

Samayam Tamil 10 Aug 2022, 7:58 am
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில், உலகம் முழுவதிலும் இருந்து வந்த 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இவ்விழாவின் நிறைவு பகுதி நடந்து முடிந்துள்ளது.
Samayam Tamil சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்


44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. அதோடு மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்தது. இவ்விழாவில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பூப்பந்தாட்டம், கண்ணாமூச்சி, சதுரங்கம் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தது.

Bayilvan Ranganathan: பணத்துக்காக இப்படியா.?: பயில்வானை வெளுத்து வாங்கிய மீனாவின் தோழி.!

நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் ஆராதனா, செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அசத்தினார்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்க்க, பலரும் ஆராதனாக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்