ஆப்நகரம்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிளாக் ஷீப் யூடியூப் சேனல்!

கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 2வது படத்தின் தயாரிப்பை நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

Samayam Tamil 30 Nov 2018, 10:43 pm
கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 2வது படத்தின் தயாரிப்பை நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளார்.
Samayam Tamil rio raj


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிப்பைத் தொடர்ந்து பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார். சொந்தமாக தனது பெயரில் சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள கனா படத்தை தயாரித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருண்காமராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து 2வது படத்திற்காக பூஜையை நேற்று தொடங்கியுள்ளார். ஆம், சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் ன்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இதற்காக, பிளாக் ஷீப் யூடியூப் சேனலுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கான பட பூஜை நேற்று நடந்துள்ளது. ஸ்மைல் சேட்டை என்ற பெயரில் யூடியூப் ரசிகர்களை கவர்ந்த நிலையில், நேற்று முதல் பிளாக் ஷீப் யூடியூப் என்ற புதிய பெயருடன் அந்த சேனல் இயங்கி வருகிறது.

இப்படத்தில் சரவணன் மீனாட்சி புகழ் சரவணன் (உண்மையான பெயர் ரியோ ராஜ்) ஹீரோவாக நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவுகளுடன் 2வது படத்தின் தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்குகிறோம். இப்படத்தின் மூலம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். ரியோ ராஜ், ஷெரின் காஞ்ச்வாலா, ராதா ரவி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்