ஆப்நகரம்

'ஆர் ஆர் ஆர்' பட விழாவில் 'வலிமை' குறித்து பேசிய சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் உற்சாகம்!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர் ஆர் ஆர்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Samayam Tamil 28 Dec 2021, 4:43 pm
'பாகுபலி' பட இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் ஆர் ஆர்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது.
Samayam Tamil Sivakarthikeyan
Sivakarthikeyan


'ஆர் ஆர் ஆர்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. கீரவாணி இசையமைப்பாளராக பணியாற்றி வரும் இந்த படம் தமிழில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 'ஆர் ஆர் ஆர்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், நான் ராஜமௌலி சாரோட மிகப்பெரிய ரசிகன். மகதீரா படம் பார்த்ததிலிருந்து, அவருடைய பெரிய ஃபேன் ஆக மாறிட்டேன். அதன் பிறகு 'நான் ஈ' படம் பார்த்தேன். ஒரு ஈ வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹிட் படம் எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். அப்பொழுதுதான் நான் சினிமா இண்டஸ்ட்ரியில் நுழைந்த நேரம். ஈ-யை வைத்தெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுக்கிறார்கள் கண்டிப்பாக நம்மையும் சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று அப்பொழுதுதான் எனக்கு தைரியம் வந்தது.

என்னவொரு பிரமாதமான படம்: '83' படக்குழுவினரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!
ஒரு படம் ஹிட் கொடுத்தாலே, கெத்தாக பேசும் பலருக்கு மத்தியில், இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து விட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க தொடங்கிவிடுகிறார். அது ஒரு பெரிய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது. சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் ஜெயிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்று ராஜமெளலியை புகழ்ந்தார்.

மேலும் 'ஆர் ஆர் ஆர்' படம் கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கப் போகின்றது அதுமட்டுமில்லாமல், அஜித்தின் வலிமையும் வரப்போகிறது. இந்த படத்தை எல்லாம் மக்கள் திரையரங்கில் வந்து பார்த்தால், அதன் பிறகு படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக எங்கள் படங்களையும் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

'ஆர் ஆர் ஆர்' பட விழாவில் அஜித்தின் 'வலிமை' குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் பேச்சுக்கு விழாவில் கைத்தட்டல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்