ஆப்நகரம்

கோலிவுட் ஆடும் சிவகார்த்திகேயன் விளையாட்டு!

கோலிவுட் ஆடும் சிவகார்த்திகேயன் விளையாட்டு!

TOI Contributor 20 Oct 2016, 8:26 pm
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படம் ஒரு வாரத்தில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் நிலையில் அவரை அவர்குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Samayam Tamil actor sivakarthikeyans business making big problem in kollywood
கோலிவுட் ஆடும் சிவகார்த்திகேயன் விளையாட்டு!


சில தினங்களுக்கு முன்பு ரெமோ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நெருக்கடி கொடுப்பவர்கள் வேலை செய்யவிடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து விஷால், சிம்பு ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்த விவகாரம் வேறு வடிவம் பெற்றுள்ளது. நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவிடம் பணம் வாங்கியதாகவும், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோரிடம் பணம் வாங்கவில்லை என்றும் படம் நடித்துக்கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கோலிவுட்டில் இதுகுறித்து பல்வேறு விஷயங்கள் சொல்கின்றனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்மொழி உறுதியை வைத்து தற்போது கால்ஷீட் கேட்பதாக கூறப்படுதகிறது. அதே போல் வேந்தர் மூவிஸ் மதன் சிவாவின் படங்களை வெளியிட்ட காலத்தில் கால்ஷீட் கேட்டதாகவும், தற்போது மதன் தலைமறைவாக இருப்பதால், அவர் கொடுக்கும் கடனை சரிசெய்வதற்காக மதுரை அன்புவின் ஆட்கள் சிவாவிற்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு புறம் சிவாவின் வளர்ச்சி பிடிக்காத முன்னணி நடிகர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சிவா நல்ல நண்பர். எவருடைய பேச்சை கேட்டுவிட்டு இப்படி பேசுகிறார். யாருடைய கட்டுப்பாட்டிலோ சிவா இருப்பதால் என் மீது இப்படி பழி சுமத்துகிறார் என்றார். வேந்தர் மூவிஸ் மதன் தரப்பில் பேசிய அவருடைய வழக்கறிஞர், வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போய் 6 மாதமாகிறது. ஆனால் அவர் மீது சிவகார்த்திகேயன் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. அவர் எப்போது மிரட்டினார் என்று கூறினால் அவரை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவரிடம் கேட்டதற்கு வருகிற 24ம் தேதி அனைவரையும் நேரில் வரச்சொல்லி இருக்கிறோம். எல்லோரிடமும் நேரில் பேசிய பிறகு ஒரு தீர்வு கிடைக்கும் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்