ஆப்நகரம்

"பரியேறும் பெருமாள்" இயக்குனருக்கு தான் வரைந்த ஓவியத்தை பரிசளித்த நடிகர் சிவக்குமார்!

நடிகர் சிவக்குமார், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

Samayam Tamil 6 Oct 2018, 4:48 pm
கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தை மாரி செல்வராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.
Samayam Tamil sivakumar


சாதிய கொடுமைகளுக்கு எதிரான எடுககப்பட்ட இந்தப் படத்தை பார்த்த, பொதுமக்களும், திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இயக்குனர் மாரி செல்வராஜை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜிடம், ‘‘சமூகத்துக்கு அவசியமான படம். ஒவ்வொருவரின் மனதிலும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்தி விட்டீர்கள். சில காட்சிகளில் கலங்கவைத்து விட்டீர்கள்’ என்று சிவக்குமார் அவரைப் பாராட்டி, தான் வரைந்த ஓவியப் புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்