ஆப்நகரம்

நடிகர் சிவகுமார் மனசு யாருக்கு வரும்; வீட்டையே தானம் செய்தார்!!

அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக, நடிகர் சிவகுமார் தனது தி.நகர் வீட்டையே தானமாக வழங்கியுள்ளார்.

TOI Contributor 2 May 2017, 5:17 pm
அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக, நடிகர் சிவகுமார் தனது தி.நகர் வீட்டையே தானமாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil actor sivakumar donated his house to agaram foundation
நடிகர் சிவகுமார் மனசு யாருக்கு வரும்; வீட்டையே தானம் செய்தார்!!


நடிகர் சிவகுமாரின் வீடு சென்னை தி,நகரில் உள்ள கிருஷ்ணா தெருவில் உள்ளது. இவரது வீட்டை ஒட்டித்தான் இயக்குனர் சங்கரின் வீடும் உள்ளது. சிவகுமார் திரைப்படங்களில் நடித்து சொந்தமாக வாங்கிய ஆரம்பக்கால வீடு இது. அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி மற்றும் மகள் பிருந்தா மூவரும் இந்த வீட்டில்தான் இருந்துதான் படித்தனர். எப்போதும் சிவகுமார் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருபவர். அவரது மனைவியும் அதேபோல்தான்.

குடும்பம் பெரிதான நிலையில் அனைவரும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்பதற்காக அதே பகுதியில் நடிகர் சூர்யா ''லட்சுமி'' என்ற பெயரில் பெரிய வீட்டை கட்டியுள்ளார். தற்போது அந்த வீட்டிற்கு சிவகுமார் தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்துள்ளார்.

இதை முன்னிட்டு 'அகரம் பவுண்டேஷன்' நிறுவனத்தின் அலுவலக பணிகளுக்கு தனது பழைய வீட்டை தானமாக சிவகுமார் வழங்கியுள்ளார். துவக்கத்தில் சிவகுமார் இலவச கல்வி சேவை செய்து வந்தார். சூர்யா சினிமாவில் நுழைந்த பின்னர் அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி இந்த சேவையை தனது சகோதரரும்,நடிகருமான கார்த்திக்குடன் இணைந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

Actor Sivakumar donated his house to Agaram foundation

அடுத்த செய்தி

டிரெண்டிங்