ஆப்நகரம்

பஸ் கண்டக்டரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்.. எஸ்.ஜே. சூர்யாவின் மாஸ் பேச்சு..!

சினிமா ஏழை பணக்காரன் என யாரையும் பார்க்காது. அர்ப்பணிப்பு மட்டுமே முக்கியம் என பட விழா ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா.

Samayam Tamil 4 Feb 2022, 6:29 pm
கிஷன் நாயகனாக நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ள படம் அஷ்டகர்மா. ஹாரர் ஜானரில் சைக்கலாஜிகல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil S.J. Surya
S.J. Surya


இவ்விழாவில் படத்தின் இயக்குநர் விஜய் தமிழ்செல்வன் பேசும்போது, “நான் மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் யாரிடமும் ஸ்கிரிப்ட் எடுத்துக்கொண்டு அலையவில்லை, இந்த நிறுவனத்திடம் மட்டும் தான் கதை சொன்னேன். கொரோனா உச்ச கட்டமாக சீனாவில் இருந்த காலத்தில் இந்தபடத்தை ஆரம்பித்தோம். இங்கு கொரோனா வராது என்று நினைத்தோம், கொரோனா வந்ததால் படம் லேட்டாகிவிட்டது.

படத்தில் டி.ஆர் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். இது எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம். இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இசையில் L.V.முத்து கணேஷ் இரவு பகலாக உழைத்துள்ளார்கள். பாலா கிருஷ்ணா மனோஜ் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தை நன்றாக எடுத்துள்ளோம் தியேட்டரில் வந்து பாருங்கள் நன்றி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவருக்கும் எனக்கும் இடையில் இருக்குறது இதுதான்.. யாஷிகா ஆனந்த் ஓபன் டாக்..!
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, 'அஷ்டகர்மா' விஜய் அவர்கள் நல்ல கதையை உருவாக்கி, அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள். கிஷன் செல்வாக்கு மிகுந்தவர், அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அவர் தன் லட்சியம் ஒன்றை நோக்கி ஆசைப்பட்டு பயணித்துள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். சினிமா ஏழை பணக்காரன் என யாரையும் பார்க்காது, பஸ் கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றும். பணக்காரரையும் பெரிய ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும். எவ்வளவு அர்ப்பணிப்போடு அவர்கள் நடித்துள்ளார்கள் என்பதுதான் முக்கியம். சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு நாயகன் கிஷன் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த எண்ணமே அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரும் என்று கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்