ஆப்நகரம்

நடிகர் சூரி பசங்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திருக்குறள் நூல் பார்சல்!

கொரோனா தடுப்பு பணிக்காக ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் நடிகர் சூரி.

Samayam Tamil 4 Jun 2021, 12:12 pm
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகள் மட்டுமல்லாமல் நிவாரண பணிகள், நோயாளிகளுக்கு சிகிச்சை, முன்களப் பணியாளர்களுக்கான நிவாரணம் என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Samayam Tamil Udhayanidhi Stalin_Soori
Udhayanidhi Stalin_Soori


இந்தநிலையில், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வந்தனர்.

திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நன்கொடை அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பாக ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருந்தனர்.

பத்து தல திரைப்படத்திற்கான வேலைகளை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்: ஹாப்பி மூடில் சிம்பு ரசிகர்கள்!
இந்நிலையில் நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மேலும் தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.


இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நடிகர் அண்ணன் சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். சூரி அண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்