ஆப்நகரம்

சொகுசு காரை விற்று விவசாயத்திற்கு நிதியளித்த நடிகர் சுதீப்!

நடிகர் சுதீப், தன்னுடைய பிஎம்டபிள்யூ காரை விற்று விவசாய தொண்டு நிறுவனத்திற்கு நிதியளித்துள்ளார்.

TNN 17 Dec 2017, 8:02 am
நடிகர் சுதீப், தன்னுடைய பிஎம்டபிள்யூ காரை விற்று விவசாய தொண்டு நிறுவனத்திற்கு நிதியளித்துள்ளார்.
Samayam Tamil actor sudeep to sell his luxury cars for welfare of agriculutre
சொகுசு காரை விற்று விவசாயத்திற்கு நிதியளித்த நடிகர் சுதீப்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கி தமிழில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் நடிகர் சுதீப். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வெளிவந்த ‘புலி’, ‘பாகுபலி’ ஆகிய படங்களில் நடித்தார். கன்னட படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும், தொடர்ந்து தமிழில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் அழுத்தமான கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகர் சுதீப் சமூக அக்கறை கொண்ட நிகழ்சிகளில் கலந்துக்கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ஏற்கெனவே கன்னட நடிகர், நடிகைகள் நலனுக்காக பல்வேறு நடடிக்கை எடுத்து வந்த இவர், தற்போது கன்னட விவசாயிகள் நலன் கருதி தன்னுடைய விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை விற்று உதவி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்