ஆப்நகரம்

ஒரே நேரத்தில் 9 மொழிகளில் உருவாகி வெளியாகும் முதல் இந்திய படம் ‘பயில்வான்’!

நடிகர் சுதீப் நடிப்பில் ஒரே நேரத்தில் 9 மொழிகளில் உருவாகி ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இந்தியாவின் முதல் படம் ‘பயில்வான்’.

Samayam Tamil 22 Dec 2018, 4:31 pm
இயக்குனர் எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பயில்வான்’. இந்தப் படம் இந்தியாவின் 9 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குனர் எஸ்.கிருஷ்ணாசெய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘நடிகர்கள் சுதீப், சுனில்ஷெட்டி, நடிகை ஆகாங்க்ஷாசிங் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பயில்வான்’.
Samayam Tamil sudeep


இந்தப் படத்தை இந்தியாவின் 9 மொழிகளில் தயாரித்து வருகிறோம். இந்திய வரலாற்றில் ஒரு திரைப்படம், ஒரேநேரத்தில் 9 மொழிகளில் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, போஜ்பூரி, வங்காளி, பஞ்சாபி உள்ளிட்ட 9மொழிகளில் உருவாக்கப்பட்டுவரும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் சுனில்ஷெட்டி முதல்முறையாக கன்னடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சுதீப், குத்துச்சண்டைவீரராக நடிக்கிறார். கன்னடத்தில் உருவாகும் இப்படத்திற்கு ரூ.45கோடி வரை செலவழித்துள்ளோம். இந்த அளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் முதல் கன்னடப்படம் இதுவேயாகும். இந்த திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்