ஆப்நகரம்

சாவு வீட்டிற்கு சென்ற போது, சிரித்தபடி செல்ஃபி எடுத்த சுரேஷ் கோபி!

சுரேஷ் கோபியின் செஃல்பி இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Samayam Tamil 10 Jul 2018, 12:33 am
திருவனந்தபுரம்: சுரேஷ் கோபியின் செஃல்பி இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Samayam Tamil Suresh Gopi


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மகாராஜா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவரான கல்லூரி மாணவர் அபிமன்யூவை(20), கேம்பஸ் பிரண்ட் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளின் தொண்டர்கள் கொடூரமாக கொலை செய்தனர்.

இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சூழலில் மலையாள நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோபி துக்கம் விசாரிக்கச் சென்றார். இதற்காக வடபஞ்சாயத்து கொட்டக்கம்பூரில் உள்ள அபிமன்யூ வீட்டிற்கு ஆறுதல் கூற புறப்பட்டு போனார்.

அங்கு அபிமன்யூவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் காவல்துறையினரிடம் வழக்கு விசாரணை குறித்து கேட்டறிந்தார். அதற்குள் ஏராளமான பொதுமக்கள் சுரேஷ் கோபியை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டனர்.

அதனை ஏற்றுக் கொண்ட சுரேஷ் கோபி, அவர்களுடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட பலரும், கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Actor Suresh Gopi selfie is condemned by social media pesons.

அடுத்த செய்தி

டிரெண்டிங்