ஆப்நகரம்

சூர்யா விமானத்தில் அழைத்துச் செல்லும் 100 பேர் யார் தெரியுமா?

சூரரைப் போற்று பாடல் வெளியீட்டுக்காக முதல் தடவை விமானம் ஏறும் 100 பேர் யார் எனத் தெரிந்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 2:11 pm
Samayam Tamil flyers
சூரரைப் போற்று படத்தின் பாடல் வெளியீட்டை முன்னிட்டு, விமானத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள் 100 பேரும் விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.


சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த பாடலை பறக்கும் விமானத்தில் வைத்து வெளியிட ஏற்பாடு செய்துள்ளது படக்குழு. நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் பல புதிய விசயங்களை செய்து வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் இதுவரை விமானம் ஏறாத 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்து செல்வது. இந்நிலையில், இவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளனர்.

அகரம் பஃவுண்டேசன் சார்பில், கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இந்த 100 குழந்தைகளும். அதில் விமானத்தில் செல்ல வேண்டும் என்கிற தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு முதல் முறை விமானத்தில் பறக்கும் வாய்ப்பு சூரரைப் போற்று டீம் மூலமாக கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்