ஆப்நகரம்

Suriya: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தீவிர ரசிகை: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.!

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தனது ரசிகையின் மறைவிற்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 20 May 2023, 7:49 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது 'கங்குவா' என்ற படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தனது ரசிகைக்கு இரங்கல் தெரிவித்துள்ளது பலரையும் கலங்க செய்துள்ளது.
Samayam Tamil சூர்யா
சூர்யா


அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் வணிக வளாகத்திற்குள் இருந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் ஹைதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணும் இறந்துள்ளார். இவர் நடிகர் சூர்யாவின் தீவிரமான ரசிகை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சூர்யா, ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு இரங்கல் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை இழந்ததும் துரதிர்ஷ்டமானது. ஒரு சக மனிதனாகவும் தந்தையாகவும் உங்கள் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Thalapathy 68: 'தளபதி 68' படம் குறித்து தீயாய் பரவும் தகவல்: உண்மையை சொன்ன பிரபலம்.!

உங்களின் மகளை நினைவு கூறும் போதெல்லாம் என் கைகளை பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மகள் வானத்தில் பிரகாசமான நட்சத்திரமாக இருந்து நாம் அனைவரையும் கவனித்து கொண்டிருக்கிறார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் ஐஸ்வர்யா பற்றி கூறும் போது, நீங்கள் என் மீது வைத்திருந்த பாசம் என்றென்றும் என் நினைவில் இருக்கும். என்னை உங்களின் ஒரு பகுதியாக வைத்திருந்த நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்றிருக்க வேண்டியதில்லை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் பிரார்த்தனைகள். இவ்வாறு உருக்கமாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் நடிகை சூர்யா.

விக்ரம் வேற லெவல்.. மாளவிகா மோகனன் கொடுத்த 'தங்கலான்' படத்தின் வெறித்தனமான அப்டேட்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்