ஆப்நகரம்

தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது: சூர்யா பேட்டி

தமிழகத்தின் அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

TNN 10 Feb 2017, 12:53 pm
தமிழகத்தின் அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor suriya talks about tamilnadu politics
தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது: சூர்யா பேட்டி


ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சி3 படம் துபாய் உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று வெளியானது. துபாயின் ஹயாத் ரீஜென்சியில் வெளியான இந்தப் படத்தை பார்ப்பதற்காக நேற்று துபாய் சென்றிருந்தார். முதல் காட்சியாக இரவு 7 மணிக்கு திரையிடப்பட்ட தன்னுடைய படத்தை ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து பார்த்து ரசித்தார். அதற்கு முன்னதாக செய்தியாளகர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொடர்ந்து சிங்கம் படங்கள் நல்ல படங்களாகவே அமைந்தன. ஹரியின் சிறு ஆசையான போலிசில் சேர வேண்டும் என்பதை போலீஸ் கதையை வைத்து சரிசெய்து கொள்கிறார் என்று கூறினார்.

மேலும், இப்போது தமிழகத்தின் சூழலை நான் உங்களோடு பார்த்து வருகிறேன். விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

Actor suriya talks about tamilnadu politics.x

அடுத்த செய்தி

டிரெண்டிங்