ஆப்நகரம்

கேவி ஆனந்துடன் மீண்டும் கை கோர்த்த சூர்யா - இன்று தொடங்கும் படப்பிடிப்பு

நடிகர் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்) படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்குகின்றது.

Samayam Tamil 4 Sep 2018, 1:16 pm
நடிகர் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்) படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்குகின்றது.
Samayam Tamil Suriya


என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக அயன் படத்தை இயக்கிய இயக்குனர் கேவி ஆனந்த் உடன் இணைந்துள்ளார்.

பெயரிடப்படாத இந்த படம் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகின்றது. 15 நாட்கள் சென்னையிலும், பின்னர் டெல்லியிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கிடைத்துள்ள தகவலின் படி, டெல்லியை தொடர்ந்து லண்டன், நியூ யார்க், பிரேசில் நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அயன் படம் போன்றே ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக இந்த படம் இருக்கும் என கூறப்பட்டுகிறது. மேலும் அயன் படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த ஹாரீஸ் ஜெயராஜ், இந்த படத்திலும் இசையமைக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்