ஆப்நகரம்

இயக்குனருக்கு கார் வாங்கிக் கொடுத்ததை ஏன் சூர்யா விளம்பரப்படுத்த வேண்டும்: கேள்வி எழுப்பிய தயாரிப்பாளர்!

இயக்குனகளுக்கு கார் வாங்கிக் கொடுத்ததை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் என்று நடிகர் சூர்யாவை தயாரிப்பாளர் ஒருவர் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2018, 5:23 pm
இயக்குனகளுக்கு கார் வாங்கிக் கொடுத்ததை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் என்று நடிகர் சூர்யாவை தயாரிப்பாளர் ஒருவர் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil surya-car


நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இவர் எப்போதும் தன்னுடன் சொந்த நிறுவனத்தின் படங்களிலேயே தான் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ பட தயாரிப்பாளர் அளித்த ஒரு பேட்டியில், ‘‘ஹீரோக்கள் இயக்குனர்களுக்கு எதற்கு கார் வாங்கி தருவதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும். அதை ரகசியமாக வைத்துக் கொள்ளலாமே?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு சூர்யா தரப்பிலிருந்து ஒருவர், ‘‘படத்தை தயாரிக்கும் நீங்கள் முதலில் இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் சொன்னபடி சம்பளத்தை கொடுங்கள்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் சூர்யா ஒரு கார் வாங்கி பரிசளித்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்