ஆப்நகரம்

'போலீசுக்கு சப்போர்ட் செய்யும் சூர்யா':சிங்கம் 3 காரணமா?

நேற்று தமிழக காவல்துறைக்கு ஆதரவாக நடிகர் சூர்யா கருத்து வெளியிட்டுள்ளது சிங்கம் 3 படத்தின் வெளியீட்டை மனதில் வைத்துதான் என விமர்சனம் எழுந்துள்ளது.

TNN 30 Jan 2017, 9:38 am
நேற்று தமிழக காவல்துறைக்கு ஆதரவாக நடிகர் சூர்யா கருத்து வெளியிட்டுள்ளது சிங்கம் 3 படத்தின் வெளியீட்டை மனதில் வைத்துதான் என விமர்சனம் எழுந்துள்ளது.
Samayam Tamil actor surya supports tamilnadu police
'போலீசுக்கு சப்போர்ட் செய்யும் சூர்யா':சிங்கம் 3 காரணமா?


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்கும் போது வன்முறை ஏற்பட்டது.இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் காவல்துறையினர் மீதான மதிப்பு குறைந்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சூர்யா,நேற்று சிங்கம் 3 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.அதில் பேசிய அவர்,”ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பலர் காவல்துறையினர் மீது கோபத்தில் உள்ளனர்.அன்றைய சம்பவத்தில் சிலர் தவறு செய்திருக்கலாம்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த காவல்துறையையும் நாம் தவறாக நினைக்கக் கூடாது.சமுதாயத்திற்கு அவர்களுடைய பணி மிகவும் முக்கியம்.”என தெரிவித்தார்.

சூர்யாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.சிங்கம் 3 படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.தற்போது காவல்துறை மீது இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதால்,சிங்கம் 3 படத்தை அவர்கள் தவிர்க்க வாய்ப்பிருப்பதனால் காவல்துறைக்கு ஆதரவாக கருத்து வெளிடுவதாக சூர்யாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Actor Surya supports Tamilnadu Police

அடுத்த செய்தி

டிரெண்டிங்