ஆப்நகரம்

Vadivelu: நான் திமிர் பிடித்தவனா ? சர்ச்சைகள் பற்றி ஓப்பனாக பேசிய வடிவேலு..!

தன் மீது இருக்கும் சர்ச்சைகள் பற்றி வெளிப்படையாக பேசிய வடிவேலு

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 4 Dec 2022, 9:03 am

ஹைலைட்ஸ்:

  • நான் திமிர் பிடித்தவன் அல்ல
  • வடிவேலு பேச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நகைச்சுவைக்காகவே பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன.

ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என சொல்லலாம். அந்த அளவிற்கு பிசியாக இருந்த வடிவேலு சில சர்ச்சைகளாலும் பல பிரச்சினைகளாலும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். மேலும் இவர் நடிப்பில் உருவான இம்சை அரசன் திரைப்படத்தில் இவருக்கும் தயாரிப்பாளர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு சென்றது.


Thalapathy vijay: உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்..சிக்கலில் வாரிசு..!

இந்நிலையில் தற்போது ஒருவழியாக பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் வடிவேலு பேசுகையில், என்னை சிலர் திமிர் பிடித்தவன் என சொல்கின்றனர்.


என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அக்கதையில் நான் நடிக்கமாட்டேன். எனவே அந்த இயக்குனர்களின் கதையில் நான் நடிக்கவில்லை என்பதற்காக சிலர் வெளியே சென்று இவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

என் நகைச்சுவையை பார்த்து ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே இலக்கு. ஆனால் சிலர் பொறாமையில் இவ்வாறு பேசி வருகின்றனர் என்றார் வடிவேலு.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்