ஆப்நகரம்

வெள்ளக்காடான கேரளாவுக்கு விஜய் உதவாதது ஏன்?

கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள நடிகர் விஜய், இதுவரையில் கேரளா வெள்ளப் பாதிப்பிற்கு எவ்வித உதவியும் செய்யாதது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Samayam Tamil 17 Aug 2018, 9:09 pm
கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள நடிகர் விஜய், இதுவரையில் கேரளா வெள்ளப் பாதிப்பிற்கு எவ்வித உதவியும் செய்யாதது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
Samayam Tamil வெள்ளக்காடான கேரளாவுக்கு விஜய் உதவாதது ஏன்?
வெள்ளக்காடான கேரளாவுக்கு விஜய் உதவாதது ஏன்?


கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளாவில் கனமழை பெய்துள்ளது. தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 போ் உயிாிழந்துள்ளனா். 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 80 அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது” தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக அரசு சார்பில் 5 கோடி, திமுக சார்பில் 1 கோடி, மக்கள் நீதி மய்யம் 25 லட்சம், விஜய் டிவி 25 லட்சம், நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் 25 லட்சம் என அரசியல் கட்சிகள், பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர். அதேபோல், தன்னார்வல அமைப்புகள் பல தங்களால் முயன்ற அளவுநிவாரணப் பொருட்களைச் சேகரித்து, கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் விஜய், இதுவரை எவ்வித நிதியுதவி அளிக்காதது அனைவரது மத்தியிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆனால், அவர் எப்போதும் போல சில நாட்கள் கழித்தே உதவி வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்