ஆப்நகரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் நிவாரண உதவி!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் நிவாரண உதவி வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 11 Aug 2018, 10:09 pm
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் நிவாரண உதவி வழங்கியுள்ளனர்.
Samayam Tamil vijay


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பாதி பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 29 ஆக உயா்ந்துள்ளது.

இதனையடுத்து. இன்று காலை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். பின்னர், வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர்கள் நிவாரண உதவி வழங்கினர். மேலும், நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் ₹25 லட்சமும், கமல்ஹாசனும் ₹25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், கேரளா மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இலவச அரிசி, உணவு, குடிநீர், உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கினர்.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 58 அணிகளில் 22 அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமாா் 53 ஆயிரம் போ் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 5 மதகுகளும் திறக்கப்பட்ட நிலையில் அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்