ஆப்நகரம்

தன் கையை விட்டு போன படத்தை நினைத்து வருந்திய பிரபல நடிகர் விஜய்!

பிரபல நடிகர் விஜய், தான் நடிக்க முடியாமல் தன் கையை விட்டுப் போன ஒரு மாஸ் படத்தை நினைத்து வருந்தியதாக அவரே கூறியுள்ளார்.

Samayam Tamil 24 May 2019, 3:49 pm
பிரபல நடிகர் விஜய், தான் நடிக்க முடியாமல் தன் கையை விட்டுப் போன ஒரு மாஸ் படத்தை நினைத்து வருந்தியதாக அவரே கூறியுள்ளார்.
Samayam Tamil mass.


தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்திலும், கேரளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் எப்போதும் மாஸ் படத்தில் தான் நடிப்பார். அவருடைய ரசிகர்களும் அதை தான் விரும்புவார்கள், ஆனால், தற்போது விஜய் தன் அடுத்தப்படத்தை இயககும் வாய்ப்பை இயக்குனர் லோகேஷிடம் கொடுத்துள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மௌனகுரு. இப்படத்தின் கதையை இயக்குனர் சாந்தகுமார், முதலில் விஜய்யிடம் தான் சொன்னாராம். கதை விஜய்க்குப் பிடித்துப் போனதாம். ஒரு சில காரணங்களால், அதில் நடிக்க முடியாமல் போக, இப்படி ஒரு படம் மிஸ் ஆகிவிட்டதே என்று விஜய் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி63 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் படத்தைப் போன்று இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்