ஆப்நகரம்

பார்வையற்ற சூப்பர் சிங்கர் செந்தில்நாதனுக்கு உதவி செய்த நடிகர் விஜய்!

கண் பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகர் செந்தில்நாதனுக்கு, யாருக்கும் தெரியாமல் உதவி செய்துள்ளார் நடிகர் விஜய்.

Samayam Tamil 9 Oct 2018, 5:12 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் செய்யும் தான தர்மங்கள் கணக்கில் அடங்கா. இவரின் கருணையால் எத்தனையோ குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. விஜய் செய்து வரும் உதவிகள் யாருக்கும் தெரியாது. அப்படியிருந்தும் சிலது மட்டும் எப்படியே வெளியே கசிந்து விடுகிறது.
Samayam Tamil senthil nadhan


அப்படியாக சமீபத்தில் நடிகர் விஜய் ஒரு பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகருக்கு உதவி செய்திருந்தார். இந்த விஷயத்தை விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் எப்படியோ மோப்பம் பிடித்து வெளியே கூறிவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி மா.கா.பா. ஆனந்த் கூறுகையில், ‘‘விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் விஜய்யை சந்தித்துள்ளேன். அவர் மிகவும் அமைதியானவர். ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் செந்தில்நாதன் என்பவருக்கு கண் பார்வை கிடையாது. எப்போதும் பத்ரி பத்ரி என கூப்பிட்டுக் கொண்டிருப்பார். அவரது நிகழ்ச்சியை பார்த்த விஜய் அவரை அழைத்து பணம், ஐபேடு போன்றவற்றை கொடுத்து இதை தொலைக்காட்சியில் எல்லாம் சொல்ல கூடாது’’ என்று விஜய் கூறியிருந்தார் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்