ஆப்நகரம்

அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை: விஜய் அதிரடி!

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி செலுத்த தடை கோரிய வழக்கில் தனக்கு விதிக்கபட்ட அபாரதத் தொகையை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jul 2021, 6:11 pm
வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Actor_Vijay
Actor_Vijay


நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். இந்தக் காருக்கு நுழைவுவரி செலுத்தாத காரணத்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவுசெய்யப்படவில்லை. அதையடுத்து விஜய் வாங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தவிட்டார் நீதிபதி. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தன்மீதான விமர்சனத்தை நீக்கும்மாறும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் விஜய்.

மீண்டும் துவங்கிய அருண் விஜய் - ஹரி படத்தின் படப்பிடிப்பு!
இந்நிலையில் இந்த வழக்கை நேற்றைய தினம் விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் 1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நீதிமன்றம் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரித் தொகை குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஒரு லட்சம் ரூபாயை கொரானா நிவாரண நிதியாக ஏன் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் தரப்பில், ஏற்கனவே கடந்த ஆண்டு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கொரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்