ஆப்நகரம்

’பரியேறும் பெருமாள்’ ஏற்படுத்திய தாக்கத்தால் மீளா நிலையில் விஜய்

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் விஜய் படக்குழுவுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்து உள்ளார்.

Samayam Tamil 1 Oct 2018, 6:21 pm
பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் விஜய், இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியதுடன் அவரிடம் நிறைய பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளது கோலிவுட் உலகில் வைரலை கிளப்பியுள்ளது
Samayam Tamil vijay
பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய நடிகர் விஜய்


பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள படம் தான் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இதனால் இப்படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் கிடைத்துள்ளன.

தற்போது அதற்கு மேலும் மிகப்பெரிய பலத்தை கூட்டும் விதமாக நடிகர் விஜய் படத்தை பார்க்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர், எங்க பார்த்தாலும் உங்க பட பேச்சா தான் இருக்கு என கதிருக்கு நேரடியாக போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு நிறைய உங்களுடன் பேச வேண்டும் என இயக்குனரிடம் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்