ஆப்நகரம்

சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்தது; அமைச்சர் கடம்பூர் ராஜூ!

சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Nov 2018, 1:44 pm
சர்காரில் அரசின் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததால், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய் பேனர்களை கிழித்தும், போஸ்டர்களை எரித்தும் கண்டனம் தெரிவித்தனர்.
Samayam Tamil Sarkar issue


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததால் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று நீக்கப்பட்டு மறு தணிக்கை முடிந்துள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர், இன்று மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று கூறினார்.

அதன்படி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுகிறது. இனிமேல் இந்த காட்சிகள் இடம்பெறாது.

இதைத் தொடர்ந்து சர்கார் படத்தை திரையிட தணிக்கைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. முன்னதாக சர்கார் பட விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி உடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து பேசிய அவர், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால், சர்கார் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் எதுவும் கேட்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்