ஆப்நகரம்

கேரளா வெள்ள பாதிப்பிற்கு ரூ. 35 லட்சம் நிதியுதவி வழங்கினார் விக்ரம்

கேரளாவின் வெள்ள பாதிப்பிற்கு பல்வேறு தரப்பு மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சிகள், மத்திய அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் ஆகியவை நிதியுதவி அளித்து வரும் நிலையில் நடிகர் விக்ரம் ரு. 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Samayam Tamil 19 Aug 2018, 12:47 pm
கேரளாவின் வெள்ள பாதிப்பிற்கு பல்வேறு தரப்பு மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சிகள், மத்திய அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் ஆகியவை நிதியுதவி அளித்து வரும் நிலையில் நடிகர் விக்ரம் ரு. 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
Samayam Tamil vikram-donates-rain-cover-pic
கேரளாவிற்கு நடிகர் விக்ரம் நிதியுதவி வழங்கினார்


தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, கேரளா மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மொத்தம் 14 மாவட்டங்கள் கொண்ட கேரளாவில் 13 மாவட்டங்களுக்கு ’ரெட் அலர்ட்’ விடுக்கும் அளவிற்கு மழை தீவிரமடைந்தது.

இந்நிலையில் கேரளாவில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கை



முதற்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், இந்தியளவிலும் பல தரப்பு மக்கள் கேரளாவிற்கு தங்களால் ஆன நிதியுதவிகளை செய்து வருகின்றனர். இதே வரிசையில் தமிழ் திரையுலகினர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் நிதியுதவி வழங்கிய நிலையில், தமிழ் திரைப்பட நடிகர்கள்களான சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ரோகினி உள்ளிட்டோர் கேரளாவிற்கு நிவாரண நிதி வழங்கினர்.

இந்நிலையில் வரலாறு காணாத இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்து போயுள்ள கடவுள் தேசத்திற்கு நடிகை விக்ரம்
ரூ. 35 லட்சம் வழங்கியுள்ளார். விரைவில் கேரளா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக அறிக்கையில் விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்