ஆப்நகரம்

தெருவில் இறங்கி கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்: வைரல் புகைப்படம்

நடிகர் விமல் தன் சொந்த ஊரில் தானே களத்தில் இறங்கி கிருமி நாசினி தெளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 10:01 am
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது.
Samayam Tamil vimal


குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பாதிப்பு மிக தீவிரமாக இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் விமல் தனது சொந்த ஊரில் தெருவில் இறங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை பகுதியில் பன்னாங்கொம்பையில் உள்ள விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

தோளில் அவர் ஸ்பிரேயர் மாட்டிக்கொண்டு அனைத்து இடங்களிலும் அவர் கிருமி நாசினி தெளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.


மற்ற நடிகர்கள் போல வீட்டில் இருக்காமல், களத்தில் இறங்கி செயல்பட விமலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்