நடிகையின் நடிப்பைப் பாருங்கள், உடம்பை பார்க்காதீர்கள்: நடிகர் விஷால்!
படத்தில் நடிகையின் நடிப்பைப் பாருங்கள்; உடம்பை பார்க்காதீர்கள் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
TNN 28 Dec 2016, 5:45 pm
படத்தில் நடிகையின் நடிப்பைப் பாருங்கள்; உடம்பை பார்க்காதீர்கள் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகைகள் யாரும் வேண்டுமென்று உடம்பை காட்டுவதில்லை, படத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ‘கத்திச் சண்டை ’படத்தின் இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் நடிகைகள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதில் “கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ரசிகனை திருப்திப்படுத்த குறைந்த ஆடையில் கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்பு திறமையை காட்ட வேண்டும் என்றால் டி.வி.சீரியலில் நடிக்க வேண்டியதுதான்” என்று கூறியிருந்தார்.
இதற்கு நடிகை நயன்தாராவும், தமன்னாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இப்படி கூறியதற்கு இயக்குனர் சுராஜ் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தான் கூறியதற்கு இயக்குனர் சுராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இதுப்பற்றி நடிகர் விஷால் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’இயக்குநர் சுராஜ் தேவையில்லாமல் பேசியிருக்கிறார். நான் பொதுச்செயலாளராக பேசவில்லை, ஒரு நடிகராக பேசுகிறேன், நடிகைகள் நடிக்கும்போது அவர்களின் நடிப்பைப் பார்க்கவேண்டுமே தவிர, அவர்களின் உடம்பைப் பார்க்கக்கூடாது. அவர்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இதற்காக சுராஜ் மன்னிப்பு கேட்டது ரொம்ப சந்தோஷம். தமன்னாவிற்கு இந்த தர்மசங்கடம் தேவையில்லாத ஒன்று, ஸாரி தமன்னா’’ என்று விஷால் கூறியுள்ளார்.
நடிகைகள் யாரும் வேண்டுமென்று உடம்பை காட்டுவதில்லை, படத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ‘கத்திச் சண்டை ’படத்தின் இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் நடிகைகள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதில் “கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ரசிகனை திருப்திப்படுத்த குறைந்த ஆடையில் கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்பு திறமையை காட்ட வேண்டும் என்றால் டி.வி.சீரியலில் நடிக்க வேண்டியதுதான்” என்று கூறியிருந்தார்.
இதற்கு நடிகை நயன்தாராவும், தமன்னாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இப்படி கூறியதற்கு இயக்குனர் சுராஜ் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தான் கூறியதற்கு இயக்குனர் சுராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இதுப்பற்றி நடிகர் விஷால் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’இயக்குநர் சுராஜ் தேவையில்லாமல் பேசியிருக்கிறார். நான் பொதுச்செயலாளராக பேசவில்லை, ஒரு நடிகராக பேசுகிறேன், நடிகைகள் நடிக்கும்போது அவர்களின் நடிப்பைப் பார்க்கவேண்டுமே தவிர, அவர்களின் உடம்பைப் பார்க்கக்கூடாது. அவர்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இதற்காக சுராஜ் மன்னிப்பு கேட்டது ரொம்ப சந்தோஷம். தமன்னாவிற்கு இந்த தர்மசங்கடம் தேவையில்லாத ஒன்று, ஸாரி தமன்னா’’ என்று விஷால் கூறியுள்ளார்.