சென்னை: என்னை பழிவாங்கும் நோக்கில் யாரும் செயல்பட வேண்டாம் என்று நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க, காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரி என்று, நடிகர் விஷால் கூறியதாக பேஸ்புக்கில் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதற்கு நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பழிவாங்க வேண்டிய இதுவல்ல என்றும், வேறு ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். மாணவர்கள் போராட்டம் வெற்றியடைகிற நேரத்தில் யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல என்று குறிப்பிட்டார்.
மாணவர்களின் போராட்டம் சம்பந்தமாக நான் எதுவுமே தவறாக சொல்லவில்லை. சமூகவலைதளம் என்பது வேறு ஒரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகவும், அதில் தன்னை பற்றிய தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
Actor Vishal asked rumour people not to revenge me this time.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க, காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரி என்று, நடிகர் விஷால் கூறியதாக பேஸ்புக்கில் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதற்கு நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பழிவாங்க வேண்டிய இதுவல்ல என்றும், வேறு ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். மாணவர்கள் போராட்டம் வெற்றியடைகிற நேரத்தில் யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல என்று குறிப்பிட்டார்.
மாணவர்களின் போராட்டம் சம்பந்தமாக நான் எதுவுமே தவறாக சொல்லவில்லை. சமூகவலைதளம் என்பது வேறு ஒரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகவும், அதில் தன்னை பற்றிய தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
Actor Vishal asked rumour people not to revenge me this time.