ஆப்நகரம்

மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டேன்: விவரிக்கும் விஷால்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்த அனுபவம் குறித்தும் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் தமிழ் திரைப் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

TOI Contributor 30 Mar 2017, 10:29 pm
சென்னை: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்த அனுபவம் குறித்தும் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் தமிழ் திரைப் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil actor vishal narrates how he overcame depression
மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டேன்: விவரிக்கும் விஷால்


உலக சுகாதார நாள் மாநாடு வருகிற ஏப்ரல் மாதம் 6, 7-ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நாட்கள் குறித்து அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சியில் நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ், பி.வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் விஷால், தனக்கு ஏற்பட்ட மன அழுத்த அனுபவம் குறித்தும், அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார். ஒரு நாளை காலை நான் தூங்கி எழும் போது, நான் கீழே விழுந்து விட்டதாக உணர்ந்தேன். மீண்டும் எழ முடியாமல், தனிமையாகவும் அப்போது நான் உணர்ந்தேன். எனினும், அத்தகைய உணர்வில் இருந்து மீண்டு வலிமை பெற போதுமான அதிர்ஷடம் எனக்கிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். "என்னுடைய பிரதிபலிப்பை பார்த்து, எனது மனசாட்சியுடன் உரையாடுவது போல கற்பனை செய்து கொண்டு, என்னால் முடியும் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன் என்றும் விஷால் தெரிவித்தார்.

அதேபோல், மற்றொரு நடிகரும், தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் பேசும்போது, தன்னுடைய நண்பர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டார். மேலும், தனது நண்பர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ், தற்கொலை செய்து கொண்டவர் எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருப்பர். ஆனால், அவர் மன அழுத்தத்தில் இருந்தது யாருக்குமே தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

அதிகளவில் மன அழுத்தம் இருக்கும் இடங்களில், மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்றும் பிரகாஷ்ராஜ் வேதனை தெரிவித்தார்.

அதேபோல், மற்றொரு நடிகரின் தற்கொலை முயற்சி சம்பவத்தை நினைவு கூர்ந்த பிரகாஷ்ராஜ், யாராவது தன்னுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். விரைவில் பிரச்னைகள் சரியாகிவிடும் என யாரேனும் அவரிடம் சொல்ல வேண்டும் என்ற மனநிலையில் அவர் இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன் என்றார். மேலும், அவரது மனைவியும் மன அழுத்தத்தில் தான் இருந்துள்ளார் என்பது, அவரும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது தான் எங்களுக்கு தெரிய வந்தது என்றும் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 5.6 கோடி பேர்; அதாவது மொத்த மக்கள் தொகையில் 4.5 சதவீதம் பேர், மன அழுதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.
Actor Vishal narrates how he overcame depression

அடுத்த செய்தி

டிரெண்டிங்