ஆப்நகரம்

கஜினி முகமது….தொடர்ந்து என்னோட பணியை தொடர்கிறேன்: விஷால்!

விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படம் இன்று வெளியாகயிருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 May 2019, 10:06 am
விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படம் இன்று வெளியாகயிருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil raashi


அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத பல காரணங்களுக்காக இப்படம் இன்று வெளியாகவில்லை என்றும், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vishal Ayogya: அதிர்ச்சி: பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அயோக்யா வெளியீடு தள்ளிவைப்பு!

முதியோர்களை பாதுகாக்க தாய் ஃபவுண்டேசன்: அன்னையர் தினத்தில் சிறப்பு பாடல்: ராகவா லாரன்ஸ்!

இதற்கிடையில், ஒரு நடிகனாக என்னோட வேலையை நான் சிறப்பாக செய்துள்ளேன். அயோக்யா படம் வெளியாவதற்கு நான் காத்திருக்கிறேன். ஒரு நடிகனையும் தாண்டி பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ளேன். சிறு வயதிலிருந்தே நான் இப்படித்தான். கஜினி முகமதுவை குறிப்பிட்டு இது போதாதா? என்று கூறியுள்ளார். என்னோட நேரம் வரும். அதுவரையில், என்னோட பணியை தொடர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார் என்பது வரலாற்று கூற்று. அப்படியிருக்கும் போது விஷால் கஜினி முகமது என்று பதிவிட்டது பலருக்கும் கேள்வியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஷாலின் தயாரிப்பாளர் சங்கத்தை அரசே ஏற்றுக்கொண்டு விட்டது. அதோடு, வரவு, செலவு கணக்கு தொடர்பாக சங்கத்தின் கணக்கை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோக்யா படம் ரிலீஸ் ஆகாதது குறித்து, ரசிகர்கள் பலரும் வருத்தமும், விமர்சனமும் செய்து வருகின்றனர்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்