ஆப்நகரம்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி கோரிக்கை வைத்த விஷால்

ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான உதவித் தொகை சரியாக சென்று சேர்கின்றதா என கண்காணிக்குமாறு ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனிடம் நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

TNN 29 Dec 2017, 3:34 pm
ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான உதவித் தொகை சரியாக சென்று சேர்கின்றதா என கண்காணிக்குமாறு ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனிடம் நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
Samayam Tamil actor vishal supports to ttv dhinakaran
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி கோரிக்கை வைத்த விஷால்


விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்தார். 2011ல் அவர் ஆட்சியமைத்த போது 500 ரூபாயாக இருந்த முதியோர் உதவித் தொகை, 1000 ரூபாயாக உயர்த்தினார்.

தமிழகம் முழுக்க 21 லட்சம் முதியோர்கள் தலா ரூ.1000 பெறுவாட்தை உறுதி செய்தார். 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரின் மறைவுக்கு பின்னர் இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால், பயனடைந்து வந்த முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதான காலத்தில் உதவித் தொகை கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் அலைந்து திரிகின்றனர்

இந்த நிலை ஆர்.கே நகர் தொகுதியிலும் நிலவுவதால் அவர்களுக்கான முதியோர் உதவித்தொகை சரிவர சென்று சேர்கின்றதா புதிதாக எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனாகிய உங்களிடம் என கண்காணிக்க வேண்டும்.

உங்களுக்கு எனது ஆதரவு எப்போது இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்