ஆப்நகரம்

நடிகர் விஷால் 22ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

நடிகர் ராதாரவி சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷால் வரும் 22-ஆம் தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 20 Dec 2017, 5:17 pm
நடிகர் ராதாரவி சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷால் வரும் 22-ஆம் தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil actor vishal to appear in court on 22nd december
நடிகர் விஷால் 22ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!


நடிகர் விஷால், கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். இதனையடுத்து முன்னாள் நிர்வாகிகளான நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து ராதாரவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்வு காணும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் உத்தரவாதம் அளித்து விட்டு, அவரை சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை ராதாரவி தொடர்ந்தார்.

இது தொடர்பாக விஷால் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் விஷால் வரும் வெள்ளிக்கிழமை (22-ம் தேதி ) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்