ஆப்நகரம்

Vishal: நடிகர் விஷால் வீட்டை தாக்கிய மர்ம நபர்கள்: உச்சக்கட்ட பரபரப்பு.!

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 28 Sep 2022, 7:28 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஷால் நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார். இவரின் தந்தை ஜி.கே.ரெட்டி மிகப்பெரிய தயாரிப்பாளர். இந்நிலையில் நடிகர் விஷாலின் வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil விஷால்
விஷால்


விஷால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இவர் வீட்டருகில் காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை அண்ணா நகரில் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர்.

அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், இந்த புகாரில் இணைத்துள்ளோம். எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம்புவுக்கு கார், கௌதம் மேனனுக்கு புல்லட்: கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் அளித்த பரிசு.!

இதனையடுத்து போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த கல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது, நடிகர் விஷால் வெளியூரில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்