ஆப்நகரம்

இதெல்லாம் ஒரு காரணமா? காதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? விஷ்ணு விஷால் விளக்கம்!

காதல் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 6 May 2019, 12:23 pm
காதல் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.
Samayam Tamil vishnu.


தமிழ் சினிமாவில், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியில், இவரது நடிப்பில் வந்த படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஏன், இருவரும் பிரிந்தோம் என்று யாரும் தெரிவிக்காத நிலையில், தற்போது, காதல் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பல படங்களில் நடிகைகளுடன் நெருங்கி நடித்ததை மனைவி விம்பாதது தான் எங்களது பிரிவுக்கு காரணம். ஆரம்பத்தில் நான் ரொம்பவே கூச்சசுபாவம் கொண்டவன். ஆனால், திரைப்படங்களில் வெற்றி கிடைக்க இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தேன்.

இது எனது மனைவி ரஜினிக்கு பிடிக்கவில்லை. இதனால், எங்களுக்கு இடையில் சண்டை வந்தது. நான் காதலித்தவர் நீ இல்லை என்று சண்டை போட்டார். சினிமாவை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால், மோதல் வரவே இருவரும் பிரிந்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், எனது மனைவியையும், மகனையும் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களும், அவ்வாறு நேசிக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்