ஆப்நகரம்

சிரியா தாக்குதல் குறித்து அடுத்த படத்தில் பேசுவது உறுதி! - நடிகர் விவேக்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கவுடா பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிரியா அரசு - ரஷ்யா கூட்டுப்படைகள் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 28 Feb 2018, 1:27 pm
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கவுடா பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிரியா அரசு - ரஷ்யா கூட்டுப்படைகள் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil actor vivek tweet about syria attack
சிரியா தாக்குதல் குறித்து அடுத்த படத்தில் பேசுவது உறுதி! - நடிகர் விவேக்


இந்த கொடூர தாகுதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty” என கருத்து தெரிவித்துள்ளார்.

சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty pic.twitter.com/sosdftOxfH — Vivekh actor (@Actor_Vivek) February 27, 2018
விவேக்கின் டுவிட்டிற்கு ஒருவர், “அடுத்து வரும் படத்தில் இந்த தாக்குதல் குறித்த விழிப்புணர்வை தெரிவிக்க வேண்டும் என்பது என் அவா” என கேட்டிருந்தார்.

அடுத்து வரும் படத்தில் இந்த தாக்குதல் குறித்த விழிப்புணர்வை தெரிவிக்க வேண்டும் என்பது என் அவா — Srinivasakumar (@SrinivasBryan) February 27, 2018
நிச்சயம் தெரிவிப்பேன்.இது உறுதி. https://t.co/3QW93z8rgL — Vivekh actor (@Actor_Vivek) February 27, 2018
அதற்கு பதிலளிக்கும் விதமாக விவேக், “நிச்சயம் தெரிவிப்பேன்.இது உறுதி” என பதிலளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்